Wednesday, March 23, 2011

விரலின் நுனியில் (விரிந்திடும்) உலகம்....

முன்னொரு காலம்
உறவிற்குள்
முகம் பார்த்து பேச
காத்திருந்தோம் 
பல நாட்கள் !

 நல்லதோ, கேட்டதோ
செய்திகள் அனுப்பினால்
போய்ச் சேரும்
சிலநாட்கள் கழித்து !

இன்றோ ..............

விரிந்திடும் உலகத்தை
விரல் நுனியில் 
கொண்டு வந்தோம்
வலைதளத்தின் வடிவினிலே ........! 

 கற்காலம் தொட்டு இக்காலம்
வந்து கற்பனைக்கும் எட்டாத 
வருங்காலம் வரை இணைக்கின்ற
வலைதளமோ  இப்போது ..... !

ஊரென்ன, பெயரென்ன 
உருவமேதும் தெரியாமல்
நண்பர்களாய் பேசுகிறோம்
மணிக்கணக்கில்..... !

படிப்பு, நட்பு, செய்தி
என்ற பாகுபாடு இன்றி
அனைத்தும் அறிகிறோம் 
அமர்திருக்கும் அறையிலேயே......... !

உலகத்தின் எங்கோ
ஒரு மூலையில் 
உறவுகளைத்  தேடி
இனிக்கின்ற செய்தி பேசி
இதயங்களை பரிமாறி
இணைக்கின்றதொரு
அரிதான இணையதளம்...... !
   
 அன்புடன்
பாலா    
   
    

 

உனக்காக நண்பா ...........

கடற்கரை காற்று 
     ஒரு கவளம் சோறு
 என்னுயிர்த் தோழனோடு
     இதை விட வேறு
 என்ன வேண்டும் எனக்கு 
      நித்தமும் கூடினோம் 
நடுநிசி என்றும் பாராமல் 
     சரியோ தவறோ
சத்தமாய் பேசினோம் 
     மனதில் பட்டதெல்லாம் 

எவ்வித சலனமும்
      இல்லாமலே
இப்படியே கூடினோம் 
       நாட்களும் பல காலம் 
யார் கண்கள் பட்டதோ 
      எங்கள் நட்பின் மீது
 மாறி மாறி அவரவராய்
      பார்க்க கூட காத்திருந்தோம் 

சில காலம் ! பிரிவு என்னும் 
     சொல் கூட இல்லை 
என்றோம் எங்களுக்குள்
    அவனோ  இருக்க இடம் தேடி
ஓடினான் சில காலம்
      ஆம் கிடைத்தது பார் 
யோகம் போல நண்பர் 
      கூட்டம் ஒன்று

 திசை மாறி எனை மறந்து
      சென்றான் அவனே !
எனைத்தேடி அவன் அலைந்தான்
     முன்னொரு காலம் !
ஆனால் இன்றளவில் எனைப் 
     பார்க்க நேரமில்லை அவனுக்கு !
நினைக்க தான் தோன்றவில்லை
     அவன் மனதிற்கும் கூட !

அவன் என்று பேசினேன்
      ஆரம்பம் முதலே !  இனி
அவ்வாறு அழைத்தால் 
      மரியதை இல்லையெனத்
தோன்றியதெனக்கு ! அவகாசம் 
       கேட்டேன்,  அவரோடு பேச !
செல் ஒன்று  வைத்துள்ளார் 
     அவர் ! சில முறை அல்ல !  
செய்திகள் அனுப்பினேன் !
     பல தடவை அவரோடு பேச !

அவர் நினைவைத் 
      தட்டவில்லை அவையெதுவுமே !
நேரில் பார்த்தபோது 
     வணங்கினார் மரியாதை 
நிமித்தமாக ! எனை 
     கடந்தவுடன்  எனை மறந்தான் 
என் உயிர்த்தோழன்  !
     வழி கேட்டான், 
வழிகளும்  சொன்னேன்
      அவன் கேட்ட போது

இருவர் செல்ல 
      வழி சொன்னான்
அவனும் கூட .....
    புறப்பட்டோம் இருவருமே 
வெகுதூர பயணமாக சில காலம் ! 
     பாதியிலே அவர் மட்டும் 
தனித்தோட ! முடியாமல் 
     திரும்பி விட்டேன்  
நான் மட்டும்  தனியாக !



  இன்றிரவு ...............


மீண்டும் அதே கடற்கரை 
      அதே ஒருகவள சோறு 
உண்ண மனம் இன்றி நான் மட்டும்
      இருக்கின்றேன் தனியாக .............



அன்புடன்
bala
 


             
 




     

முத்திரைக்கு முகம் ஏது?


வருடங்கள் மாறும்
      வயதும்கூட ஏறும் 

மனது மட்டும் குழந்தை
      போன்று இளகி ஓடும்

தந்தை, ஆசான், அதிகாரி
     எவ்வளவோ உயர்பதவி

உங்களுக்கு அவை இருந்தும்
      பகட்டேதும் துளிகூட

எதுவுமின்றி, அர்த்தமுள்ள
     அறிவுரைகள் பலகூறும்

நண்பரோடு நண்பராக
      அனைவரோடு பழகும்

எங்களவருக்கு மனமார்ந்த 
     இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

அன்புடன்
    பாலா  


       

பூக்களின் புன்னகை விழா (13/02/2011)

பூக்களின் புன்னகை விழா  (13/02/2011)


காற்றலைகளில் மிதப்பது போல் 
         சந்தித்த நீங்கள் 

 அப்போது தோன்றவில்லை 
         உங்களிடத்தில் எதுவுமே 

சில நொடிகள் கூட
       செல்ல வில்லை அதுவுமே
 
சிறிதான ஆசை
        சிறப்பாக சொன்னார் 

சிரிக்கின்ற முகத்தோடு
       பூ போன்ற மலருக்கும் 

பிடித்ததும் அதுதான் 
       குழலூதும் கண்ணனையும் 

பிடிக்குமென பதில் கூற 
        இருவருமாய் சேர்ந்து 

தனித்தனியே நின்று
        பெற்றோரிடம் கேட்க

சம்மதமென சான்றோரும்
        செவி சாய்த்துக்கொள்ள
   
மணக்கின்ற பூவும்,
       இணைக்கின்ற நாரும்

 நாள் பார்த்து நின்றது
       பூங்கொத்து போல 

காதலர் தினம் கொண்டாட
      இது காதலும் அல்ல

பெற்றோரும், உற்றோரும்
       இவர்கள் உறுதி கண்டு

சேர்த்தும் வைத்தனர்
      அதற்கு முந்தைய நாளே 
 
ஆன்றோரும், சான்றோரும்
      வாழ்த்துக்கள் பல கூற 

சந்தோஷ வானில் 
      என் தோழி சிறகடிக்க

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
      பல கோடி நான் சொல்வேன் .

அன்புடன்
      பாலா