Thursday, July 4, 2013

காலை மெரினா

கடற்கரை சாலை
காலை 8 மணி

சில்லென்ற நீருடன்
ஆதவனும் மேலெழும்ப
சிலிர்க்கின்ற வேகத்தில்
மீன்களும் துள்ளியோட
வலை வீச வந்தனர்
மீனவர் கூட்டம் ...
ஓர சாலையிலே
காலை வேளையிலே
உடல் குறைக்க
தினம்  ஓடி
அங்கமெல்லாம்
வியர்வையாகி ...
களைப்பற
படிக்கட்டில்
ஒரு சிலரும்
அமர்ந்திருக்க....
மணி தெரியா
அவசரமாய்
அவரவர்
அலுவலகம்
நோக்கி நடை போட ...

அரை குறையாய்
உணவுண்டு
பள்ளி செல்லும்
மாணவர்கள்
வேகமாக நடை போட ...
சிறு கடைகள்
ஆங்காங்கே
விண்மீனாய்
சில திறக்க...
காதலர்கள்
விடை கொடுத்து
அவர்களும்
பிரிந்து செல்ல ...
இரவுப்பணி
தினம் முடித்து
வீடு செல்லும்
காலையிலே
நான் காணும்
கடலோர காட்சி இவை....

No comments:

Post a Comment